நடிகர் விஜய் 
சினிமா

அடேங்கப்பா..5000 திரைகளில் கோட் திரைப்படம்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Staff Writer

விஜய்யின் கோட் திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகிறது. முதல் நாளிலேயே ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் ஆந்திரத்திலும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.50 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது. இதுவே, கேரளத்தின் இதுவரையிலான மிகப்பெரிய வெளியீடு என அப்படத்தின் கேரள உரிமம் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram