கரீனா கபூர் 
சினிமா

கோடியில் சம்பளம்… கணவர் வீட்டில் கஷ்டப்படும் நடிகை!

Staff Writer

ஒரு படத்திற்கு ரூ. 10லிருந்து 15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை கரீனா கபூர், தனக்கு சம்பளம் முக்கியம் இல்லை எனவும் கதாபாத்திரம்தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர்களில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் கரீனா கபூர். இந்தி திரையுலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் கடைசியாக 'க்ரூ' என்ற படத்தில் நடித்தார். இதில் தபு, கபில் சர்மா மற்றும் கிருத்தி சனோன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தனது 20 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். அவரிடம் ஒரு படத்திற்கு ரூ.10லிருந்து 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்தவர், ‘நிச்சயம் அந்த சம்பளம் வேண்டும். நான் பணத்திற்காக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. கதாபாத்திரம் பிடித்திருந்தால் குறைந்த சம்பளத்தில் கூட நடிப்பேன். எனக்கு சம்பளத்தை விட தனிப்பட்ட திருப்தி மற்றும் கதாபாத்திரத்தின் தரம் ஆகியவை முக்கியம்.

இது என் கணவர் வீடு. இங்கு உட்கார்ந்துதான் உங்களுக்கு நேர்காணல் கொடுக்கிறேன். நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் தெரியுமா.” என்று கிடண்டலாக பதிலளித்தார்.

இதற்கிடையில், இவர் 'சிங்கம் அகைன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தினை வருகிற நவம்பர் 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram