முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் 
சினிமா

காயங்கள் ஆறும்…! வாழை படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Staff Writer

வாழை திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரிசெல்வாஜ்.” என உருக்கமாக கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram