இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற சோகத்§¾¡டு அகதிகளாக வருபவர்களின் நிலை வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. உலகில் எந்த ஒரு இனத்திற்கும் இந்த நிலை வரக்கூடாது ( ஜூலை 2006 :தலையங்கம்)
1997 ஜனவரி மா¾ம் இனிய நந்தவனம் - மக்கள் மேம்பாட்டு இதழ் தொடங்கப்பட்டது. எட்டு பக்கத்தில் தொடங்கப்பட்ட இவ்விதழின் அப்போதைய விலை 3.00 ரூபாய். தொடக்க காலத்தில் மூன்று ஆண்டுகள் வெளிவந்து , பிறகு இரண்டு ஆண்டுகள் காலாண்டிதழாக வெளிவந்¾து. அதன் பிறகு தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் த.சந்திரசேகரன் முத்துக் கண்ணன் என்பவர் ஆரம்ப காலத்தில் இணை ஆசிரியராக இருந்தார். இப்போதைய இணை ஆசிரியர்கள் தன்னம்பிக்கை லெனா, சி.ºங்கீதா , ஆலோசகர் புலவர் தியாக சாந்தன்.
இலக்கியத்தையும் புதிய எழுத்தாளர்களை °க்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இவ்விதழில் , ஆரம்ப காலத்தில் கதை , கவிதை மட்டுமே வெளியாகி வந்தன. பிறகு ¾ன்னம்பிக்கைத் தொடர், நேர்காணல் போன்றவை வெளியாகி வருகின்றன.
வெளிநாட்டு எழுத்தாளர் அனுபவத் தொடரில் வண்ணை தெய்வம் ( பிáன்ஸ்) , ந.பச்சை பாலன் (மலேசியா), விக்னபாக்யநாதன் (ஜெர்மனி) போன்றோர் ¾ம் அனுபவங்களை எழுதியுள்ளனர்.அத்துடன் பல வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் நேர்காணல்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இவ்விதழ் செல்வது குறிப்பிடத்தககது.
ம. திருவள்ளுவர் , கவிஞர் பீர் முகமது , லெணா , கன்னிக் கோவில் ராஜா, த.சுப்பிரமணியம் , வேதா இலங்கா திலகம் , வல்லிக் கண்ணன் , பொன்குமார் ,இரா.இரவி , மட்டுவில் ஞானக்குமாரன் , உணர்ச்சிக் கவிஞர் சிங்கார வேலன் , போன்ற பலரது படைப்புகள் இவ்வி¾ழில் வெளியாகி வருகின்றன. தலையங்கம் நுழைவாயில் எனும் பெயரில் வெளியாகிறது. நóதவனத்தார் பதில்கள் , கவி வனம் , நூல்நயம் ,வந்தவனம் (கடிதங்கள்) போன்ற பகுதிகளும் இவ்வி¾ழில் வெளியாகின்றன.
லேனா தமிழ்வாணன் , பா.விஜய் , கல்யாண மாலை மோகன் , போன்ற வெகுஜன ஆளுமைகளின் நேர்காணல்கள் இவ்விதழில் இடம்பெறுகின்றன. இலக்கியத்தைக் காட்டிலும் தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகளே இதில் அதிகம் இடம்பெறுகின்றன.
இனிய நந்தவனம் அவ்வப்போது சிறப்பிதúகளையும் வெளியிட்டு வருகிறது. மருத்துவச்சிறப்பி¾ழ் , சித்¾¢ரை சிறப்பி¾ழ் , பொங்கல் சிறப்பிதழ் , தாய் மொழி சிறப்பி¾ழ் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்
ஆசிரியர் பற்றி ...
நந்தவனம் சந்திரசேகரன் என்று அறியப்படும் த.சந்திரசேகரனுக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் ஈழத்தில் வவுணியாவில் பிறந்தவர். 1981 லிருந்து தமிழகத்தில் வசித்து வரும் இவர் , தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநி¾¢யாக பணியாற்றி வருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை , கதை , கட்டுரை முதலியன எழுதி வரும் இவர், உலகத்தமிழ் சிற்றி¾ழ்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார்.
சந்தா விவரம்
தனி இதழ் - ரூ 5.00
ஆண்டுக்கட்டணம் - ரு. 60
இரண்டாண்டுக்கட்டணம் - ரூ. 120
புரவலர் கட்டணம் - ரு 1000
வெளிநாடுகளுக்கு
ஆண்டுக்கட்டணம் - 10 US டாலர்
இரண்டாண்டு கட்டணம் - 20 US டாலர்
புரவலர் கட்டணம் - 200 US டாலர்
முகவரி
இனிய நந்தவனம்
8, வெள்ளாளத்தெரு , உறையூர்
திருச்சி - 620003
தொலை பேசி - 94432 84823
Á¢ýÉïºø - nandavanam04@rediffmail.com
- மு. யாழினிவசந்தி
வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.
கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
|
|
| |
|