இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நவின்சாவ்லா ஓய்வுபெற்றதை அடுத்து, நாட்டின் பதினேழாவது தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி இன்று காலை பதவி ஏற்றார்.
டெல்லியில் பிறந்த சகாபுதீன் யாகூப் குரேஷி, 2006-ல் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ஆனார். அதற்கு முன்பு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளராகப் பணியாற்றினார். அரியானா மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், தூர்தர்சன் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியவர்.
தலைமைத்தேர்தல் ஆணையராகப் பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' நாட்டின் 71.4 கோடி வாக்காளர்களில் 85 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. பையோமெட்ரிக் அட்டைகளை அறிமுகப்படுத்துவது சிறந்த யோசனை; ஆனாலும் இது குறித்து இன்னும் உறுதியான முடிய்வு எடுக்கப்படவில்லை" என்றார்.
|
|
| |
|