செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்: மேரி கோம் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்: மேரி கோம் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 24 , 2023 09:51:54 IST
மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கண்டித்து மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அனுராக் தாக்கூர் கூறினார். ஒரு மாதத்தில் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று அவர் தெரிவித்தார். அதுவரை இக்குழுவே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
|