அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விருமன்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2022  17:37:04 IST


Andhimazhai Image

கெட்ட தந்தைக்கும் நல்ல மகனுக்கும் இடையில் நடக்கும் மோதல்களே ‘விருமன்’ திரைப்படம்.

 
தந்தை முனியாண்டியை (பிரகாஷ்ராஜ்) கொல்ல சிறுவயதிலேயே கத்தியைத் தூக்குகிறார் விருமன் (கார்த்தி). இதனால் தாய்மாமா (ராஜ்கிரண்) வீட்டில் வளர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மூத்த அண்ணன்கள் மூவரும் தந்தையுடனே இருக்க, விருமன் மாமாவுடன் சேர்ந்து பந்தல் போடும் வேலை செய்கிறார். இடையிடையே தந்தையுடனும் மோதுகிறார். இருவருக்குமான மோதல் முற்றிக் கொண்டே சொல்ல, அதற்கான காரணமும் சொல்லப்படுகிறது.

 
முனியாண்டிக்கும் விருமனுக்கும் மோதல் முற்ற, நேரம் பார்த்துக் காத்திருந்தவர்கள் போல், இவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்ட துணிகிறது இன்னொரு தரப்பு. இதிலிருந்து தந்தையும், மகனும் மீண்டார்களா? இல்லையா? கெட்ட தந்தை மனம் திருந்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

 
ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் முட்டல் மோதலை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்க முற்பட்டிருக்கிறார் இயக்குநர் முத்தையா. முழு படத்தையும் முனியாண்டி கதாபாத்திரம் முன்நகர்த்திச் சென்றாலும், அந்த கதாபாத்திர உருவாக்கம் காத்திரமாக இல்லாமல் போனது படத்திற்கு பெரும் இழப்பே. சந்தோஷம், இழப்பு, துரோகம், பழிவாங்கல் என உணர்ச்சி கொப்பளிக்கும் காட்சிகள் நிறைய இருந்தும், பார்வையாளர்களை படம் ஈர்க்கவில்லை.

 
விருமனாக நடித்திருக்கும் கார்த்தி கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். அதேபோல், முதல் படம் என்றே தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார் அதிதி, அவருக்கு ரொமான்ஸ் கொஞ்சம் குறைவாகவே வருகிறது. அதற்குப் பதிலாக நடனத்தில் துள்ளியிருக்கிறார். சூரியின் காமெடிகள் சில இடங்களில் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ராஜ்கிரண், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன் என ஒவ்வொருவரும் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

 
கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே. படத்தொகுப்பும், கலை இயக்கமும் படத்திற்குத் தேவையான பங்களிப்பை செய்திருக்கிறது.

 
கதைக்கு என்ன தேவையோ அதையே வசனங்களாக எழுதியிருக்கும் இயக்குநர், பூலான்தேவி பற்றி எழுதியிருக்கும் வசனம் கண்டனத்துக்குரியது. யுவன் சங்கர் ராஜா மாஸ் கமர்சியலுக்கு தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ‘கஞ்சாப் பூவு கண்ணால’ பாடல் அளவுக்கு மற்ற பாடல்கள் அசைபோட வைக்கவில்லை.

 
மீசையும் மருவும் வைத்தால் மாறு வேஷம் என்பது போல், முந்தைய படங்களின் ஊரையும் பேரையும் மாற்றிவிட்டால் முத்தையாவின் படம் ரெடி!

தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...