செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
வழக்கறிஞர் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
வழக்கறிஞர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 07 , 2023 11:30:58 IST
வழக்கறிஞர் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்னா மேத்யூ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார். அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும். வழக்கறிஞர் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில், விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக தொடர்ந்து மனு மீதான விசாரணை தொடங்கியது. காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
|