அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ட்ரிக்கர்:திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   24 , 2022  12:52:59 IST


Andhimazhai Image

அப்பா மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்கும் மகனின் கதையே ட்ரிக்கர்.

 
வழக்கு ஒன்றில் தன்னிச்சையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யப்படுகிறார் காவல் துறையில் இருக்கும் நாயகன் அதர்வா. அதன் பின்னர் அவரை, காவல் துறையைப் பற்றி ரகசியமாக விசாரிக்கும் குழுவிற்கு மாற்றுகிறார் காவல் ஆணையர்

 
தவறு செய்யும் போலீஸ் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கண்டுபிடிப்பதுதான் அந்தத் துறையின் வேலை. அதர்வா அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்கிறார். அது தொடர்ச்சியாக வேறு பல தொடர்புகளுடன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணையின் முடிவில் அவர் எதை அம்பலப்படுத்தினார் என்பதே படத்தின் மீதிக் கதை.
 

படத்தின் இடைவேளை போது, பக்கத்திலிருந்தவர், ‘தம்பி உங்களுக்குப் படம் புரிந்ததா’ என்று கேட்கும் அளவிற்கு முதல் பாதி இருந்தது. புதிதாக ஏதாவது சொன்னால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்காக எதை எதையோ சொல்ல முற்பட்டு குழம்பிப் போய் இருப்பார் போல இயக்குநர் சாம் ஆண்டன்.
 

காவல் துறையில் பணியாற்றுபவராக நடித்துள்ள அதர்வா ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக நடித்துள்ளார். தன்யாவிற்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம் தான். முனிஸ்காந்த், சின்னிஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் வரும் காட்சிகளே ஆறுதலாக உள்ளன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருக்கும் அருண்பாண்டியன் அசாத்தியமான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் ராகுல் தேவ் ஷெட்டி மிரட்டலான உடல்மொழியால் நடுங்க வைக்கிறார்.
 

ஜிப்ரான் ஆக்‌ஷன் படத்திற்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ‘சுகுபி டூபா’ பாடல் ஓகே என்று சொல்லும் அளவிற்குத்தான் உள்ளது.

 
பிளாஷ்பேக், குழந்தைக் கடத்தல், ரகசியக் குழு போன்றவை குறித்து விரிவாகவும் பேசியிருக்கலாம். அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு முக்கியமானது அதை படம் தவறவிட்டிருக்கிறது. ரசிக்கும்படியான திரைக்கதையும் சுவாரஸ்யமும் இல்லாமல் போனது ட்ரிக்கரில் எந்த ட்ரிக்கும் இல்லை!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...