அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை- ஜூலை19வரை புதுகை மீனவர்கள் தடுப்புக்காவலில்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   05 , 2022  18:20:10 IST

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 
 
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று திங்களன்று இலங்கையை ஒட்டிய கடல்பகுதியில் மீன்பிடிக்குச் சென்றனர். அப்போது எல்லைதாண்டி அந்நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் காரை நகர் பகுதியில்  சென்றுவிட்டதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் நேற்று காலையில் அவர்களைக் கைதுசெய்தனர். 
 
 
இன்று காலையில் இலங்கை அரசின் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் மூலமாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் புதுகை மீனவர்கள் ஐவரும் நிறுத்தப்பட்டனர்.
 
 
வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை வரும் 19ஆம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 
 
முன்னதாக, கடந்த ஞாயிறன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட தமிழக, புதுவை மீனவர்கள் 12 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தால் வரும் 8ஆம் தேதிவரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

English Summary
TN fishermen to be in Judicial custody till 19th July

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...