அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு: ஆய்வில் தகவல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   18 , 2022  08:13:57 IST

தமிழ்நாடு தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாக பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும். 304 திட்டங்களின் மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடியை தமிழகம் மூலதனமாக பெற்றுள்ளது. 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்றுள்ள மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ரூ.36 ஆயிரத்து 292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாக பெற்றிருந்தது.
 
தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 610 கோடியாகும். ரூ.77 ஆயிரத்து 892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் 2-வது இடத்திலும், ரூ.65 ஆயிரத்து 288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்திலும் இருக்கின்றன என ‘புராஜெக்ட் டுடே' நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
 
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சில நிறுவனங்களில் ‘டாடா' குழுமம், ‘ஜே.எஸ்.டபிள்யூ. ரீனியூ', ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்', ‘டி.வி.எஸ்.' மோட்டார், ‘அதானி' குழுமம், 'லார்சன் அண்ட் டூப்ரோ' ஆகியவை அடங்கும்.
 
தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதற்கு அதன் சிறப்பான கொள்கைகளும், பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் அணுகுமுறையுமே காரணங்களாகும்.
 
இதுகுறித்து தொழில்துறையின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ‘‘எங்களது பிரச்சினைகளை பற்றி கேட்பதற்கும், அவற்றை தீர்த்து வைப்பதற்குமான விருப்பம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் கருத்தாகும். முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன.
 
ஊக்கத்தொகுப்புகள் உடனடியாக கிடைக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவை முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு விரைந்து முடிவெடுப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது’’ என்றார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...