செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்: சிம்பு அறிக்கை
தந்தையின் உடல்நிலைக் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்: சிம்பு அறிக்கை
Posted : புதன்கிழமை, மே 25 , 2022 08:09:00 IST
தந்தையின் உடல்நிலைக் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகரும், முன்னணி நடிகர் சிலம்பரசனின் தந்தையும் ஆவார். மே 7-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிம்புவோ அவரது குடும்பத்தினரோ இது குறித்து எதுவும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை. இருப்பினும், டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நேற்று இரவு சமூக வலைதளங்களில் கசிந்தது. இதையடுத்து அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தனது தந்தையின் உடல்நிலை குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம். அப்போது அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். தற்போது அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
|