![]() |
முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்Posted : புதன்கிழமை, அக்டோபர் 31 , 2007 02:24:17 IST
தமிழின் சிறுகதை, நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் சப்தரிஷி ராமாமிர்தம் எனப்படுகிற லா.ச.ரா. இன்று காலை (30.10.07) மறைந்தார். திருச்சிக்கு அருகே லால்குடியில் 30.10.1916 ஆம் ஆண்டு பிறந்த இவர் எழுதிய முதல் சிறுகதை மஞ்சரி ஈஸ்வரன் நடத்திய 'சிறுகதை' என்ற பத்திரிக்கையில் வெளியானது. தனது 18 வயதில் முதல் கதையை எழுதினார். லா.ச.ரா. சொற்களை அதற்குரிய பொருளோடு பயன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதுபற்றி எழுதும்போது நெருப்பு என்றால் வாய் வேக வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தனது 91 ஆவது வயதில் மறைந்துவிட்ட லா.ச.ரா வுக்கு 4 மகன்கள் 1 பெண். அவருக்கு சிறுவயதுமுதலே சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. குடும்பம், அது சார்ந்த உறவுகள், உணர்வுகள், பெண்களின் மகத்துவம் என அந்த உலகின் உன்னதங்களை எழுத்தில் கவிதையாக வடித்தெடுத்த அவர் தன்னை சௌந்தர்ய உபாசகன் என்று சொல்லிக்கொண்டார். உணர்ச்சி, கொந்தளிப்பு, சலனம் ஆகியவை அவரது எழுத்தில் காணக்கிடைப்பவை.1989 ஆம் ஆண்டு தன்னுடைய 'சிந்தாநதி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.அஞ்சலி, ஜனனி, அபிதா ஆகிய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்பட்டவை.இவருடைய எழுத்துக்கள் ஆங்கிலம் மட்டுமில்லாது பிரெஞ்சு மற்றும் செக் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவரை கவர்ந்த எழுத்தாளராக ஹெர்மன் ஹெஸ்ஸே இருந்தார். அவரது அபிதா என்ற நாவல் Lolita என்ற நாவலோடு இணைத்துப் பேசப்பட்டது.
|
|