![]() |
முத்துமகரந்தன் - கவிதைத்திருவிழா 7Posted : வியாழக்கிழமை, ஜுன் 08 , 2006 01:57:21 IST
மனைவி
கொஞ்சம் பேர் சந்தித்தார்கள் ஏதேதோ பேசினார்கள் பூக்களையும் கனிகளையும் புறக்கணித்து மரத்தைத் தடவிப் பார்த்தார்கள் ஆசிரியைக் கூட்டி வந்து அறுத்துப் பார்த்தார்கள் பக்கத்துத் தோட்டக்காரனிடம் விசாரித்துப் பார்த்தார்கள் திருப்தியானதும் சிலுவையை நேர்த்தியாய்ச் செய்தார்கள் நுப்றைய பேர் முன்னிலையில் புத்தாடையும் புதுச் சரிப்புமாய் என்னை அறைந்தார்கள் வலிக்கவில்லை ரத்தம் வரவில்லை காலமெல்லாம் சுமந்து திரிகிறது என் சிலுவை ஜெபிக்கிறவனுக்கான சிலுவை உனக்காக மட்டுமல்ல நீ மண்டியிடும் போது எனக்காகவும் ஜெபி லஷ்மிக்காய் காத்திருக்கிற கணங்கள் யாவும் நீர் மேல் நடக்கிற நிமிடங்களாய் நம்புதலற்று நகர நீர் தவறி நீருக்குள் நான் மூழ்குமுன் ஏன் ல‰மி வரணுமாய் உரக்க ஜெபி முடிந்து ரா போஞனத்திற்கு நீ தாமதமாவெயெனத் தெரிந்து உனக்கான ரசத்தையும் ரொட்டியையும் ஈ விழாதவாறு மூடி தனியே எடுத்து வைக்கிறேன் என் சாமானியனே! - முத்துமகரந்தன் கவிஞர் முத்துமகரந்தன், தென்காசியில் மனைவி, மகளுடன் வசிக்கிறார். "கவிதை மூலம் ஒன்றைத் தேடுவதோ, கண்டடைவதோ சாத்தியமில்லை. அது ஒரு அனுபவம். மேலும் வாழத்தூண்டும். அனுபவிக்கத் தூண்டும். ஊச்சி" என்று கவிதையைப் பற்றி கருத்து வைத்திருக்கிறார். கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகியோரிடம் ஈடுபாடு கொண்ட முத்துமகரந்தன் கவிதைகள் கலாப்ரியாவின் கவியுலகத் தொடர்ச்சியைக் கொண்டவை. 'பெருவியாதிக்காரனின் கடவுள்கள்" என்பது இவரது முதல் தொகுதி. அவரது இயற்பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். புதிய தலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர். தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன. கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க... கவிஞர் சுகுமாரன் கீதாஞ்சலி பிரியதர்ஷனி தேன்மொழி.எஸ் தேவதேவன் ம.திலகபாமா கோ.வசந்தகுமாரன் மதியழகன் சுப்பையா ரவிசுப்ரமணியன் அழகுநிலா அரிக்கண்ணன் அய்யப்ப மாதவன் அன்பாதவன் ஜே.கே.73
|
|