அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிதைத்திருவிழா 4 -அரிக்கண்ணன்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   02 , 2006  01:46:46 IST

ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்.

நீயோ
பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில்
உறங்கப் பழகிவிட்டாய்.

**************************

என் செல்லமாவிற்கு...

கவிதைகளில் அகப்படாத
அழகுகள் மலிந்து கிடக்கிறது
அவளிடம்.

சதா மனதை நச்சரித்து
தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறாள்.போகுமிடமெல்லாம் கூட வருகிறாள்
ஏதேனும் தொணதொணத்துக்கொண்டே.

முத்தமிடுகிறாள். அழுத்தமாக.
தலைகோதி கலைத்து விடுகிறாள்.
¿றுமணங்களை அணிந்து கொள்கிறது மனம்
பூக்களைப் போல.
என் எல்லாக் கவி¨¾களும்
தோற்றுப் போகின்றன அவளிடம்!

**************************

என்னைப் பிரிந்து
உன்னாலும் போக முடிகிறது.
என்னாலும் இருக்க முடிகிறது.


**************************

டிபன் பாக்ஸில்
ஒற்றை முடி
ஊடலின் கவிதையாக!

**************************

ஒரு சொம்பு நீர்

இறுதியாய்
உன் பிரேத முகச்சிரிப்பில்
மௌனமாய் அழுது
பத்தோடு நானும்
ஒரு சொம்பு நீர் ஊற்றி
சுடுகாடு வரை நடந்திருந்தால்
எல்லாம் முறையாக
முடிந்து போயிருக்கும்.

ஆச்சியை எனக்குக் கட்டிவைக்கும்
உன் கேலிகளும்,
போன பொங்கல்வரை
திருநீறு பூசித் தந்த காசும்,
தொலைந்து போகாமல்
உன் அரவணைப்பில்
வைகையில்
கள்ளழகரைப் பார்த்த சித்திரையும்,
வரும் விழியில் வாங்கித்தந்த
பலூன்களும்,
பீடி வாங்கத் தந்த
ஐந்து பைசாக்களும்

எல்லாம்
ஒரு சொம்பு நீரில் சரிக்கட்டப்பட்டிருக்கும்.

நெய்ப்பந்தம் கொளுத்த நானில்லாமல்
தாத்தா உனக்கு
அப்படியென்ன அவசரம்.

தந்தி படித்து
நான் திரும்பி வருவதற்குள்
மண் தின்னும் அவசரம்.

**************************

ஒழுங்கான வளைவுகளோடு
தெருநெடுக
நீர்க்கோடு தெரிகிறது.
நின்றுமோள முடியாமல்
வண்டியிழுத்துப்
போகின்றதொரு மாடு.

**************************

என் வீட்டில் வளர்கின்ற
னாயின் வால்
நிமிர்ந்துதான் இருக்கவேண்டும்
என்று நினைக்கின்ற
மனிதர்களுக்குச்
சொல்ல என்ன இருகின்றது.

-அரிக்கண்ணன்

இயந்திர வாழ்வில் மிச்சமிருப்பது நாஸ்டாலஜிக்கான கவிதைகள் மட்டும் தான்.
பூஞ்சை மனதுடன் தொலைந்து போன நேற்றை வார்த்தைகளுக்குள் பத்திரப்படுத்தும் முயற்சியில் அரிக்கண்ணன்.

மத்திய பிரதேசத்தில் வங்கி பணி புரியும் அரிக்கண்ணனுக்கு சொந்த ஊர் மதுரை.அரிதாக எழுதும் அரிகண்ணனின் கவிதைகள் காலச்சுவடு உட்பட பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...