அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிதைத் திருவிழா 2 - அன்பாதவன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   16 , 2006  05:23:50 IST

இரண்டாம் தாய்

தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.

**************************

ஹைபுன்

ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த
என் பூமியில் மாற்றத்தை விதைத்த
முதல் மழைத்துளி நீ

பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில்
பூமி நனைந்தது
தன்னை இழந்தது;கவலை மறந்தது
இதமான உரையாடலில்
பதமானது பயிர் வளர்க்க

ஊடுபயிராய் நுழைந்து
பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில்
தீண்டும் மென்தென்றல்

பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள்
உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி

என்னுள் பசுமை வளர்த்த
இயற்கையின் ரூபமே
வாடத வாழ்வை வரமாய்த் தா!

ஈர இதழ்கள்
உறிஞ்சிய சூரியன்
சிவந்த ரோஜா.

*******************************

அரூபங்களின் தரிசனம்

இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை
படைப்பாக்கும் உயர்கலை

உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட
கிடைக்குமோ தூரிகை

மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை
கொஞ்சல் சிணுங்கல்களை
கொலுசொலியின் லயங்களை
இசைக்கோர்வை அமைக்க
இல்லையடியெனக்கு இசைஞானம்

விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு
படிமங்கள் தேடுகிறேன்

முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்
எதன் குறியீடென்று
ஆராய்கிறேன் தனிமைகளில்

மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்

இதழ் கவ்வும் தருணங்களில் கசியும்
கேவல் விம்மல்களுக்கு
இசையாகும் வாய்ப்புமுண்டு

சாத்தியம்தான் இவையனைத்துங்கூட
விடைபெறும்போது வெளியிடும்
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க
திரிந்தலைகிறேன்
உலக மொழிகளின் காடுகளில்

- அன்பாதவன்

வேலையின் நிமித்தம் மும்பையில் குடியிருக்கும் அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்Ðìகளை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது.

தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
ஜே.கே.73


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...