அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரணிலும் பதவிவிலக சஜித் பிரேமதாசா அழுத்தம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   09 , 2022  17:34:46 IST

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவிவிலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். 

 

இன்று மதியம் கொழும்புவில் உள்ள அரசுத்தலைவர் மாளிகை, அரசுத்தலைவர் செயலகத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர். இந்த அசாதாரணமான நிலையை அடுத்து என்ன செய்வது என ஆலோசனைநடத்துவதற்காக மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் சபாநாயகர் அபேவர்த்தன பேசினார். 

 

முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தன. இதையொட்டி சஜித் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்கள் இராஜபக்சேக்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்; அதற்கு எதிராக இராஜபக்சேக்களுக்கு உடந்தையாகவே ரணில் பிரதமர் ஆக்கப்பட்டார்; அவர் நடத்தும் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் தங்கள் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார். 

 

ஆட்சியைக் காப்பாற்றும் வாயிற்காவலர்கள் நடத்தும் கூட்டத்தால் எந்தப் பயனும் இல்லை; வீண் பேச்சு பேசாமல் பிரதமரும் அரசுத்தலைவரும் பதவிவிலக வேண்டும் என்றும் சஜித் வலியுறுத்தியுள்ளார். 

 

இதற்கிடையே, திடீர் நலக்குறைவு காரணமாக மதியவாக்கில் சஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

 


English Summary
Sajith calls for resignation of Lanka pres, PM

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...