![]() |
நேற்றாகிப் போனதில் வருத்தம்: இயக்குநர் பார்த்திபன் வருத்தம்!Posted : புதன்கிழமை, ஏப்ரல் 07 , 2021 10:34:42 IST
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட உடல் நலப் பிரச்சனையால் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என இயக்குநர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துகொண்டேன் எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…” என பதிவிட்டுள்ளார்.
|
|