அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம்!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   18 , 2023  11:51:10 IST

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கட்டுப்பாடுகளை விதித்த உத்தரவு விடுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.
 
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொடர்பான வழக்கில் கலந்தாலோசிக்க முடியவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், எந்தெந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க முடியும் என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசமும் கோரப்பட்டது. அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...