அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தீர்மான விவரம்: இலங்கை நீதித்துறை அமைச்சர் தகவல்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   09 , 2022  18:08:43 IST

இலங்கையின் கொந்தளிப்பான சூழலில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் அபேவர்த்தன கூட்டியிருந்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே காணொலிக்காட்சி வழியாகப் பங்கேற்றார். 

 

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், பிரதமர் இரணிலும் தன் பதவியிலிருந்து விலகவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவரோ பதவிவிலக மறுத்ததாகவும் அதற்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

உடனடியாக சபாநாயகர், தற்காலிக அரசுத்தலைவராகப் பதவியேற்கவேண்டும்; அதையடுத்து நாடாளுமன்றத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளும் அடங்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்; நாடாளுமன்றத்தின் மூலம் இடைக்கால அரசு அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

 

இதைத் தெரிவித்த நீதித்துறை அமைச்சர் விஜயதாச இராஜபக்சே, இரணிலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை உறுதிப்படுத்தினார்.  


English Summary
Ranil should stepdown as PM Lanka all party meeting 09-07-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...