அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல: திருமாவளவன்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   06 , 2023  09:37:45 IST

திமுக-வையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிபிசி தயாரித்த குஜராத் குறித்த ஆவணப்படம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆவணப்படத்தை பார்த்த பின்னர் பேசிய திருமாவளவன், வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள மோடியிசம் bbc நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும் இருந்திருக்கிறது என்பது வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்துள்ளார் மோடி. மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி.
 
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது முன்னால் உள்ள மிகப்பெரும் சவால். எனவே, திமுகவையும் திராவிடத்தையும் பெரியாரையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல. இந்துத்துவத்தையும் அதன் சனாதனத்தையும் எதிர்ப்பது தான் தமிழ் தேசியத்தின் அங்கம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...