அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் நாசர் விளக்கம்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   18 , 2023  11:54:34 IST

சேலம் மாவட்டம், பாகல்பட்டியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், மாடுகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால் கூடுதல் விலை கேட்பதாக கூறினர். தனியார் நிறுவனங்கள் வழங்கும் தொகைக்கும், ஆவின் வழங்கும் தொகைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதால் விவசாயிகள் தனியாரை நாடுவதாக உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்களுடன் சேலம் ஆவின் துணை பொதுமேலாளர் வாணிஸ்ரீ பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல, ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில், ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும், ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில் வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கினர் எனவும் கூறியுள்ளது. ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடந்து நடைபெறும் எனவும், ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
 
இதனிடையே, திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் விலையில் 3 ரூபாயை உயர்த்தியதை சுட்டிக்காட்டினார். ஒரே ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார். அதிமுக-வின் தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் அமைச்சர் நாசர் குறிப்பிட்டார்.
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...