அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  10:28:58 IST

கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தற்போது வரை 5,00,506 நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே காலகட்டத்தில் 7,17,049 புதிய நிறுவனங்கள் 2013-ஆம் ஆண்டைய நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1 முதலான காலகட்டத்தில் 22,557 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 1,09,098 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவாக 2,36,262 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2018-19இல் 1,43,233 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2016-17இல் 12,808 நிறுவனங்களும், 2019-20இல் 70,972 நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் 14,674 நிறுவனங்களும் மூடப்பட்டன.

அரசுக்கு கிடைத்த தகவல்படி கடந்த நிதியாண்டில் 1,55,377 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2019-20இல் இந்த எண்ணிக்கை 1,22,721ஆக இருந்தது. 2016-17இல் 97,840 நிறுவனங்களும், 2017-18-இல் 1,08,075 நிறுவனங்களும், 2018-19இல் 1,23,938 நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்பட்டன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...