![]() |
அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரைPosted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 15 , 2021 14:57:37 IST
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்.
உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குவதாகவும், அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
மேலும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் லட்சியங்கள் பல தலைமுறைகளைக் கடந்து இன்று வரை மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
|
|