அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கோத்தாபய பதவிவிலகல் - இரணில் அலுவலகம் விளக்கம், குழப்பம்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   11 , 2022  16:04:59 IST

இலங்கையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியை அடுத்து, அரசு அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தாபய இராஜபக்சே அறிவித்தார். ஆனால் அதில் உறுதி பேணப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 
 
அன்றைய நாள் மாலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அதிபரும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கேவும் பதவிவிலகியாக வேண்டும் என வலியுறுத்தினர். அந்தத் தகவலை மறுநாள் அதிபர் கோத்தாபயவுக்கு சபாநாயகர் அபேவர்த்தன தெரிவித்தார். 
 
அதைத் தொடர்ந்து, தான் வரும் 13ஆம் தேதியன்று அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தாபய தெரிவித்தார் என்று தகவல் வெளியானது. அபேவர்த்தனவும் இதை உறுதிப்படுத்தினார். 
 
இந்நிலையில் இன்று காலையில் பிரதமர் இரணிலின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், அதிபர் கோத்தாபய தான் உறுதியளித்தபடி புதனன்று பதவிவிலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. 
 
அதையடுத்து, அதிபர் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், அவருடைய தகவல் எதுவாக இருந்தாலும் சபாநாயகர் அலுவலகம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், கோத்தா பயவின் முடிவில் ஏதாவது மாற்றம் இருக்கலாமோ என ஐயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

English Summary
Lanka PM wll announce only through speaker 11-07-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...