அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

லால் சிங் சத்தா: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2022  10:36:42 IST


Andhimazhai Image

வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை பேசுவதே  லால் சிங் சத்தா திரைப்படம்.
 

பஞ்சாப் மாநிலத்தில் லால் என்ற பட்டப்பெயர் கொண்ட ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுவன் லால் சிங் சத்தா (அமீர் கான்). அவனால், செயற்கை கால் உதவியுடன் தான் நடக்க முடியும் என்பதால், சக மாணவர்களாலேயே ஏளனத்துக்கு உள்ளாகிறான். அவன் மீது கருணை கொண்டு அரவணைக்கிறாள் பள்ளித் தோழியான ரூபா (கரீனா கபூர்). எப்போதும் அவளுடனே இருக்கும் லாலுவை, சக மாணவர்கள் தாக்க வரும் போது, அவனைக் காப்பாற்றுகிறாள். இவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் லாலுவுக்கு கால்கள் சரியாகி ஓட ஆரம்பிக்கிறான். அந்த ஓட்டம் அவனது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. அம்மா மட்டுமே இடம்பெற்றிருந்த லாலுவின் வாழ்க்கையில் ரூபா, பாலு, முஹம்மது என விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் எல்லோரும் லாலுவின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.


ஹாலிவுட்டில் வெளிவந்த  'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் தழுவல் தான் என்றாலும் இந்திய தன்மைக்கு ஏற்ப அதுல் குல்கர்னியின் எழுத்தும் அத்வைத் சந்தனின் இயக்கும் அமைந்திருக்கிறது.
 

ஒட்டுமொத்த கதையும் ஒரே ரயில் பயணத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அமீரின் வாழ்க்கைப் பயணத்துடன், அவசர நிலை காலம்,  இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய அரசியல் நிகழ்வுகளும் கதையின் போக்கில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
 

முதல் பாதியில் அசத்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் ஏனோ கவனம் ஈர்க்கவில்லை. அமீர்கானின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. மிஸ்டர் பீன், சாப்ளின் நடிப்பை அமீரிடம் பார்க்க முடிகிறது. பெரிய நடிகையாக வரும் வேண்டும் என நினைத்து, அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ளும் கரீனா கபூரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. சிறிது நேரம் வந்தாலும் நாக சைதன்யாவின் வெகுளித்தனமான நடிப்பு மனதில் நிற்கும் படி இருக்கிறது.


இந்தியாவின் பெரும்பகுதி மாநிலங்களின் நிலப்பரப்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். ப்ரீதம்மின் பின்னணி இசை கைகொடுத்த அளவிற்குப் பாடல்கள் கைகொடுக்கவில்லை.
 

தமிழ் டப்பிங்கில் உள்ள சில குறைகளைத் தவிர்க்க முயன்றிருக்கலாம். ஒட்டுமொத்தத்தில் லால் சிங் சத்தா சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...