அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   27 , 2023  09:42:33 IST

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட நன்னீர் ஊற்றப்பட்டு, ஹெலிகாப்டர் மூலமாக கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவியும் விழா நடைபெற்றது.
 
விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். ஜன.18ம் தேதி துவங்கிய இவ்விழாவுக்கான பூஜைகளின், தொடர்ச்சியாக ஜன.23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இவ்விழாவை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக பழனியில் குவிந்தனர். குடமுழுக்கு விழாவை காண முன்பதிவு செய்த 6000 நபர்களுக்கு மட்டுமே மலைக்கோயிலில் அனுமதி வழங்கப்பட்டது. பிற பக்தர்கள் விழாவை காண மலை அடிவாரம் முதல் பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...