அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை அதிபர் மாளிகைக்குள் மக்கள் ஆவேசம் - கோத்தபாய தப்பி ஓட்டம்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   09 , 2022  14:27:18 IST

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குள் இராணுவத் தடைகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைந்தனர் என்றும் இரண்டாவது நாளாகப் போராட்டம் மட்டுமீறிப் போன நிலையில் அரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச தப்பியோடிவிட்டார் என்றும் பன்னாட்டு ஊடகம் ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக, இன்று மதியம்வாக்கில் கொழும்பு காலி முகத் திடலில் ஆயிரக்கணக்கில் குழுமிய போராட்டக்காரர்கள், அரசுத்தலைவர் மாளிகையை நோக்கி முற்றுகையிடத் தயாராகினர். அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினரும் இராணுவத்தினரும் தடுப்பு முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. 

 

கிங்ஸ்பரி ஓட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காவல்துறை தடை அரண்களை போராட்டக்காரர்கள் தூக்கிவீசினர். மக்களின் கோப ஆவேசம் கட்டுக்கடங்காத நிலைமைக்குச் செல்லவே, அதன் வீச்சை உணர்ந்த காவல்துறையினர் அங்கிருந்து அகலத் தொடங்கினர்.  

 

தொடர்ந்து முன்னேறிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். அவற்றை சில இடங்களில் வந்த வழியாகவே மக்கள் திருப்பித் தாக்கவும் செய்வதைக் காணொலிகளில் பார்க்கமுடிகிறது. 

 

இதனிடையே, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என்றும் கூறப்படுகிறது. 

 

போராட்டக்காரர்களின் ஆவேசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிச்சென்று, அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். 

 

முன்னதாகவே, அசாதாரண நிலைமையைக் கணக்கில்கொண்டு அதிபர் கோத்தபாய அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது. ஏஎஃபி செய்திநிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது. 

 

இலங்கை அதிபர் மாளிகை வட்டாரம் தொடர்ந்து கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. 


English Summary
kota baya rajabaksha escape from president residence 09-07-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...