செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர். மேலும்,…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு
Posted : புதன்கிழமை, ஜனவரி 06 , 2021 10:36:16 IST
கர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர். மேலும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 மாணவ-மாணவிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் பள்ளி திறந்ததும் ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
|