அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கண்ணை நம்பாதே: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   17 , 2023  18:15:50 IST


Andhimazhai Image

ஒரு மரணத்தின் பின்னணியில் நிகழும் துரோகத்தையும், நயவஞ்சகத்தையும் அம்பலப்படுத்தும் அப்பாவி இளைஞர் ஒருவரின் கதையே கண்ணை நம்பாதே திரைப்படம்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ஒரே அறையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அறைக்கு வந்த முதல் நாளே இருவரும் பாருக்கு கிளம்புகின்றனர். அப்போது, பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார் உதயநிதி. ஆனால், காரில் பூமிகா மரணமடைந்த நிலையில் கிடக்கிறார். இதற்குப் பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.

பல குற்றங்களையும் அதன் பின்னணியையும் சொல்வதற்கு ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மாறன். படத்தில் சில சந்தேகங்கள் எழுகிறது. இயக்குநர் அதை சரி செய்து இருக்கலாம். அதேபோல், இறுதிக் காட்சியையும் கொஞ்சம் நம்பும் படியாகவும் எடுத்திருக்கலாம்.

படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதையும் சொல்ல முடியாது. உதயநிதியின் நடிப்பு எப்போதும் போலத்தான். படத்திற்கு நாயகி வேண்டும் என ஆத்மிகாவை வைத்துள்ளனர். சில காட்சிகளுடன் அவருடைய வேலை முடிந்துவிடுகிறது.

உதயநிதி கூடவே படம் முழுவதும் வருகிறார் பிரசன்னா. அவரது கதாபாத்திரத்தின் திருப்பம் நாம் சற்றும் எதிர்பாராதது. படத்தின் வில்லனாக ஸ்ரீகாந்த். உதயநிதியின் நண்பனாக சதீஷ் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதன்பின் படத்தில் காணாமல் போய்விடுகிறார். பூமிகாவின் கதாபாத்திரமும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். சுபிக்ஷா, வசுந்தரா, மாரிமுத்து, சென்ராயன் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்.

இரவு நேர மழைக் காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சித்துகுமார்.  ஸ்ரீதர் - ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு குறிப்பிடும் விதத்தில் அமைந்திருக்கிறது.

சில குறைகளைக் கடந்து கண்ணை நம்பாதே, நம்மை நம்பவைக்கிறது. அதுவே படத்தின் வெற்றி!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...