அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கடமையை செய்: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2022  12:58:49 IST


Andhimazhai Image

பெரும் ஆபத்தொன்றைத் தடுக்க நினைக்கும் சாமனியர் ஒருவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளே கடமையை செய் திரைப்படம்.

கட்டுமான பொறியாளரான எஸ்.ஜே.சூர்யா மனைவி, மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வர, திடீரென அவருக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்ச் மேனாக வேலைக்கு சேர்கிறார். அந்த குடியிருப்பு மிக மோசமாக கட்டப்பட்டிருப்பதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கிடையே, விபத்து ஒன்றில் சிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உடல் உறுப்பு செயலிழப்பும், வாய் பேச முடியாத நிலையும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில், அந்த கட்டட விபத்தை அவர் தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

அதைச் சொல்ல வேண்டும் இதைச் சொல்ல வேண்டும் என நினைக்காமல், மிக எளிமையான கதையை ரசிக்கும் படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்ராகவன்.

 முந்தைய படங்களில் வில்லனாக நடித்துப் பெயர் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா, இந்தப் படத்தில் பொறுப்பு மிக்க கணவனாகவும், கை, கால்கள் செயல்பட முடியாத நோயாளியாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி கதாபாத்திரத்திற்கு யாஷிகா ஆனந்த் கச்சிதமாகப் பொருந்தவில்லை. இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான்கடவுள் ராஜேந்திரனின் காமெடி அரங்கை அதிர வைக்கிறது.  வின்செண்ட் அசோகன், சேசு,  சார்லஸ் வினோத் ஆகியோரும் படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

படத்திற்கு த்ரில்லர் தன்மையைக் கொடுக்கிறது அருண்ராஜின் பின்னணி இசை. கதையின் போக்கிற்கு ஏற்ற மாதிரி ரத்னசாமியின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கடமையைச் செய்திருந்தால்,  இன்னும் நன்றாக வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 

தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...