செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 26 , 2023 09:46:51 IST
நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றினார்.
சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர். என் ரவி குடியரசு தின விழாவில் மூவர்ண்ண கொடியை ஏற்றினார். வழக்கமாக காந்தி சிலைக்கு முன் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஆனால் அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்த முறை உழைப்பாளர் சிலை அருகில் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என் ரவி.
சுமார் 6800 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தனது மனைவியுடன் வருகை தந்து கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர். இதையடுத்து குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அணிவகுப்புகளை ஆளுநர் ஏற்றார்.
|