அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   05 , 2023  10:40:26 IST

இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10.45 மணிக்கு பணிப் பெண் மலர், வாணி ஜெயராம் வீட்டுக்கு சென்றுள்ளார். அழைப்பு மணியை நீண்ட நேரம் அடித்தும் கதவு திறக்காததால், வாணி ஜெயராமின் சகோதரிக்கு மலர் தகவல் கொடுத்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையறையில் கட்டிலுக்கு அருகே சடலமாக வாணி ஜெயராமன் மீட்கப்பட்டார்.
 
இதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணி ஜெயராமின் நெற்றியில் ஒரு அங்குலம் அளவுக்கு காயம் ஏற்பட்டது உடற்கூராய்வில் அம்பலமாகியுள்ளது. அதில், தூக்கத்தில் இருந்து திரும்பிப் படுக்கும் போதோ அல்லது எழுந்திருக்க முயன்றபோதோ கட்டிலில் இருந்து கீழே விழுந்திருக்கலாம். அப்போது படுக்கை அறையில் உள்ள டீப்பாயில் விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நடு நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு உண்டாகி உயிர் பிரிந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், முழு உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்பே, தூக்கத்திலிருந்து விழுந்தாரா அல்லது உடல்நலக் கோளாறால் மயங்கி விழுந்தாரா என்பது குறித்த முழு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...