அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டைரி: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2022  22:38:05 IST


Andhimazhai Image

எவிடென்ஸ் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கின் மர்மங்களை அவிழ்க்கும் கதையே டைரி திரைப்படம்.

 
காவல் உதவி ஆய்வாளர் பயிற்சியை நிறைவு செய்ய இருக்கும் அருள்நிதிக்கு (வரதன் அண்ணாதுரை), எவிடென்ஸ் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கு ஒன்றை எடுத்து விசாரிக்கச் சொல்வார் உயர் அதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு வழக்கைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில், பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இளம் தம்பதிகள் கொலை வழக்கு அது. சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று விசாரணையை ஆரம்பிப்பவருக்கு, ஒரு சில மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் 'டைரி' படத்தின் மீதிக் கதை.

 
படம் வழக்கமான த்ரில்லர் படங்களுக்கான பாணியில் தொடங்கினாலும், உடனே வரும் காதல் காட்சி படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடுகிறது. ஊட்டியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரவில் செல்லும் பேருந்திலேயே ஏறக்குறைய முழுக்கதையும் நடக்கிறது. பேருந்தில் பயணிக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை கதையை சொன்னாலும், அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 
அருள்நிதி சரியான கதையை தேர்வு செய்திருந்தாலும், திரைக்கதை சரியாக உருவாக்கப்படவில்லை. அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் கூடுதல் உழைப்பை வழங்கியிருக்கலாம். அருள்நிதி வழக்கம் போல், தனது மௌனமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். நாயகி பவித்ரா மாரிமுத்துக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், அறிமுக காட்சியில் கவனிக்க வைக்கிறார். ஷாரா படம் முழுக்க பேசிக் கொண்டே இருந்தாலும், ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

 
டைரி த்ரில்லர் படம் என்பதை ரான் ஈத்தான் யோஹானின் பின்னணி இசையே தாங்கிப்பிடிக்கிறது. அதேபோல், பனிப்பொழிந்து கொண்டிருக்கும் உதகையின் அழகை அப்படியே ஒளிப்பதிவு செய்துள்ளார் அரவிந்த் சிங்.

 
எந்த கதாபாத்திரத்தையும் வலுவாக உருவாக்காமல் விட்டது, பதற்றத்தையும் ஏற்படுத்தாத கதை நகர்வு, பதினாறு வருடத்திற்கு ஒருமுறை வரும் பேருந்து பற்றிய தெளிவின்மை போன்றவை படத்தின் மிகப் பெரிய குறை.

 
தூசி தட்டி எடுக்கப்பட்ட வழக்கு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருந்தால், டைரி சிறந்த த்ரில்லர் படமாக வந்திருக்கும்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...