அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   19 , 2023  12:45:05 IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று காலை  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறிய கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
 
ஜனவரி மாத இறுதியில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நிறைவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில் பெண்களுக்கு இன்னும் உரிய பாதுகாப்பு இல்லை, தனது நடைபயணத்தின் போது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான பல பெண்களை சந்தித்தாக கூறினார்.
 
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு ராகுல் பதில் அளிக்காத நிலையில், தற்போது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 
இது தொடர்பாக டெல்லி காவல் சட்ட ஒழுங்கு சிறப்பு ஆணையர் பீர் ஹூடா கூறுகையில், "மார்ச் 15ஆம் தேதி அன்றே ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எங்களை அவர்  சந்திக்கவில்லை. அடுத்த நாளும் முயற்சி செய்தோம். பின்னர் நோட்டீசும் அனுப்பினோம். ஆனால் பதில் தராததால் நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...