அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டி3: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   17 , 2023  18:10:14 IST


Andhimazhai Image

மருத்துவ சேவையை பணம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கும் தனியார் மருத்துவத்தின் கொடூர முகத்தை தோலுரிக்கும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படமே டி3.

குற்றாலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிகிறார் நாயகன் பிரஜின் (விக்ரம்).  அவரது காவல் ஆய்வுக்கு உட்பட்ட பகுதியில், மர்மமான முறையில், இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இதை விசாரிக்கும் பிரஜினுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. மர்மமான உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே அவரது மனைவி கொல்லப்பட, பிரஜின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார்? குற்றங்களுக்கான பின்னணியைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

மருத்துவம் தனியார்மயமாவதில் உள்ள சிக்கலை பேச முனைந்த இயக்குநர் பாலாஜி, கதைக்குத் தேவையான செறிவான உள்ளடக்கத்தை சேர்க்க தவறியிருக்கிறார். குறும்படமாகவோ, இணையத் தொடராகவே எடுத்திருக்க வேண்டிய கதையை, முழு நீளத் திரைப்படமாக எடுத்து பார்வையாளர்களை சோதித்துப் பார்த்திருக்கிறார் இயக்குநர். இறுதி பதினைந்து நிமிட காட்சிக்கு ஒட்டுமொத்த படத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

காவல் ஆய்வாளராக நடித்துள்ள பிரஜினுக்கு ஒரே வித முகபாவனை தான் வருகிறது. எல்லா காட்சிகளும் உம்மென்றே இருக்கிறார். மருத்துவராக வரும் ராகுல் மாதவ், நாயகி வித்யா பிரதீப், எஸ்.பியாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் போன்றவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளனர். திரைக்கதை போல், கதாபாத்திர உருவாக்கமும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்களிடமும் புதுசாக எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான ஒளிப்பதிவோ, பின்னணி இசையோ, சவுண்ட் மிக்ஸிங்கோ இல்லை. என்னதான் சொல்ல வர்றீங்க? என பார்வையாளர்களுக்குக் கேள்வி எழும் வகையில் படம் ஜவ்வாக இழுக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகத்தினை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான காரணம் இறுதிக் காட்சியில் சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படத்தில், சஸ்பென்ஸே இல்லாமல் இருப்பது தான் சார் வேதனை!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...