அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   05 , 2023  10:42:19 IST

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில்  பல தலைமுறையினர்  வணங்கி வரும் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புதிய கோவில் கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும். மாற்று கருத்து இல்லை. காலச்சூழலுக்கேற்ப தான்போட்டியிடவேண்டும். திமுகவும், அதிமுகவும்  பல இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
பாஜக பல்வேறு மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிகளை அழித்த வரலாறு நாட்டுக்கும், எங்களுக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். இது கட்சியின் கருத்தல்ல என அதிமுக தலைமை  அறிக்கை வெளியிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதை நினைவு கூறுகிறேன். ஈரோடு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெல்வார் என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதுவரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். யாராவது தோல்வி அடைவேன் என கூறுவார்களா? ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என கூறுவதுண்டு.
 
பாஜகவிற்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம் என்பதை  உணர்ந்துதான் பாஜக அதிமுகவை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதிமுகவை பாஜக பிளவுப்படுத்த முயல்வதாக கூறபடுவதை பொறுத்தவரையில் திமுகவிலிருந்து அதிமுக உருவாவதற்கு பாஜகவா காரணமாக இருந்தது. பழைய சரித்திரத்தை கூறினால் திமுகவினர் அசிங்கபட்டுபோவார்கள்” என கூறினார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...