செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு!
கோவை செட்டிவீதியில் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்தால் பிறந்த ஆண் குழந்தை இறந்தது. இதுதொடர்பாக புண்ணியவதி…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு!
Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 07 , 2021 10:25:21 IST
கோவை செட்டிவீதியில் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்தால் பிறந்த ஆண் குழந்தை இறந்தது. இதுதொடர்பாக புண்ணியவதி என்ற பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.
4-வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்து வந்த புண்ணியவதி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது. தொப்புள்கொடி சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர்.
2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு சென்ற நிலையில்,மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை காவல் துறையினர் விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தையின் தாய் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315-( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|