அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கடவார்: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2022  10:33:09 IST


Andhimazhai Image

பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஈர உள்ளம் கொண்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பழிவாங்குவதே  ‘கடவார்’ திரைப்படம்.


தாய் தந்தை இல்லாத அருணும், அதுல்யாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதுல்யா கர்ப்பமாகிறார். ஏகப்பட்ட கனவுகளுடன் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப, அதுல்யாவின் தாலிக் கயிற்றைப் பறிக்கிறார்கள் செயின் திருடர்கள். நிலை தடுமாறி கீழே விழும் அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுகிறார். தாயும் சேயும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

‘திக்கற்றவர்களுக்கு தேவன் தான் துணை’என்பது போல், அதுல்யாவின் மரணத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்படுகிறது. அதற்கு காரணம் தடயவியல் நிபுணரான அமலாபால். அதுல்யா இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறது. இந்த கொலை ஏன் நிகழ்ந்தது? யார் அதை செய்தார்கள் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை.


பெரும்பாலும் த்ரில்லர் படங்கள் பேயை மையமிட்டதாக இருக்கும். ஆனால், கடவார் ஒரு மெடிக்கல் த்ரில்லர். பிரேதப் பரிசோதனை பற்றி பொதுச்சமூகம் அறியாத பல நுட்பமான விஷயங்களைப் படம் பேசியிருக்கிறது. முன்னும் பின்னுமாகக் கதை நகர்வது சில இடங்கள் குழப்பமாக இருக்கிறது. சென்னையில் வரும் பத்திரிகையாளர்களும், மலைப்பிரதேசத்தில் வரும் பத்திரிகையாளர்களும் ஒருவராகவே இருக்கின்றனர். அருண் கைது செய்யப்படுவதற்கான காரணமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 
படத்தின் மையக் கதாபாத்திரம் அமலாபால் விபூதி பொட்டு, ஒட்ட வெட்டிய முடி என வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். மனசாட்சியுள்ள  தடயவியலாளராக அமலாபால் வாழ்ந்திருக்கிறார். காவல் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன் தன்னுடைய இறுக்கமான முகபாவனையால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். அதுல்யா ரவி, முனீஸ்காந்த், திரிகன், நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகரன், ஜெய ராவ், ரித்விகா என ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவு கைகொடுத்த அளவிற்கு,  ரஞ்சின் ராஜ்ஜின் பின்னணி இசை கைகொடுக்கவில்லை.

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியையும், பிரேதப் பரிசோதனையில் இதுவரை அறியாத விஷயங்களைப் பேசியதற்காகவும் கடவார் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...