அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சகோதரரே ஸ்லோ பாய்சன் கொடுத்தார்: நடிகர் பொன்னம்பலம்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   16 , 2023  10:09:06 IST

தனது சகோதரர் விஷத்தை கொடுத்ததால் தனது சிறுநீரகம் செயலிழந்து போனதாக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாக 90-களில் வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். மேலும் தென்னிந்திய மொழிகளிலும் பல்வேறு படங்களில் இவர் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடித்தது, பொன்னம்பலத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
 
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக சிறுநீரகம் செயலிழந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு உறவினரும், இயக்குனருமான ஜெகன்நாதன் சிறுநீரகத்தை வழங்கியதால் பொன்னம்பலம் உயிர் பிழைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர், பிஹைண்ட் வுட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பரபரப்பான தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
 
குடிப்பழக்கம், போதை பொருட்களை பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் செயல் இழந்ததாக பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் அப்பாவுக்கு 4 மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என்னிடம் மேனேஜராக சில காலம் பணியாற்றினார். அவர் ஒருமுறை எனக்கு பீரில் விஷத்தை (ஸ்லோ பாய்சன்) கலந்து கொடுத்து விட்டார்.
 
இதை அவர் தான் செய்தார் என்று எனக்கு முதலில் தெரியவில்லை. பின்னாளில் தான் அவர் இந்த மோசமான காரியத்தை செய்தார் என தெரிய வந்தது. நான் இப்போது கடவுளின் அருளால் உடல் நலம் குணமடைந்து வருகிறேன். எனது கஷ்டமான நேரத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...