அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக்கூடாது: மல்லிகார்ஜூன கார்கே

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   16 , 2023  10:20:00 IST

மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
 
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். மேலும் ஆஸ்கர் விருது வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆசிரியர், பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட எம்பி எனவும் தெரிவித்தார்.
 
அதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டார். ஆனால் இதற்கு பாஜக உரிமை கொண்டாடக் கூடாது என்றும் குறும்படத்தை மோடி இயக்கினார் என்றும் கூறக் கூடாது என தெரிவித்தார். கார்கேவின் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
 
1984ஆம் ஆண்டிலேயே இந்தியா ஆஸ்கர் விருதினை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் பேசினார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணத்தில் ஆளுங்கட்சி அரசியல் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய வைகோ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்றதை நினைவுக்கூர்ந்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...