அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு: மறுசீராய்வு மனு தள்ளுபடி!

Posted : புதன்கிழமை,   மார்ச்   15 , 2023  12:58:22 IST

போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் அந்நிறுவனத்திடம் இருந்து 750 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்ட நிலையில், கூடுதலாக 7 அயிரத்து 844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தது.
 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், விஷவாயு விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே சிக்கலாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தது.
 
தொடர்ந்து, ரிசர்வ் வங்கியிடம் மீதமுள்ள 50 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய நீதிமன்றம், கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரிய மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...