அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கோட்டாபய தெளிவுபடுத்த இலங்கை பார் அமைப்பு வேண்டுகோள்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   09 , 2022  15:42:23 IST

இலங்கையில் நிலவும் மிக அசாதாரணமான சூழலில், அரசுத்தலைவராகத் தொடர்வது பற்றி கோத்தாபய இராஜபக்சே தெளிவாக அறிவிக்க வேண்டும் என அந்நாட்டின் வழக்குரைஞர் சங்கம் கூறியுள்ளது. 

 

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று பல மாகாணங்களிலிருந்தும் மக்கள் தலைநகர் போராட்டத்துக்கு குவிந்தனர். முன்னதாக, நேற்று வெள்ளியன்று இதைத் தடுக்கும்படியாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால் அதைத் தளர்த்துமாறு வழக்குரைஞர்கள், அரசியல் தலைவர்கள் எதிர்த்ததை அடுத்து இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உடனே பல மாவட்டங்களிலிருந்தும் தொடர்வண்டிகளில் அரசு அதிபருக்கு எதிராகக் கொடிகளையும் வாசகத் தட்டிகளையும் கட்டியபடி போராட்டக்காரர்கள் கொழும்புவுக்கு வந்தனர். 

 

உச்சகட்டமாக இன்று மதியம் அரசுத்தலைவர் மாளிகைக்கு உள்ளேயும் அரசுத் தலைவரின் செயலகத்துக்கு உள்ளேயும் மக்கள் புகுந்தனர். இரண்டு இடங்களும் இப்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு புகுந்த இளைஞர்கள் அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளியல் போட்டும் அங்கிருக்கும் சொகுசு இருக்கைகளில் உட்கார்ந்தபடியும் இருக்கும் படங்களும் காணொலிகளும் வெளியாகியுள்ளன. 

 

இந்த நிலைமையில், இலங்கை வழக்குரைஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் அமைதியாகவும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமலும் குறிப்பாக பழமையான அரசுத்தலைவர் மாளிகையின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

 

பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் அரசியல் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சங்கத்தின் செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

 

காவல்துறையும் இராணுவமும் போராடும் மக்களுக்கு ஊறு தராதபடி நடந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கை வழக்குரைஞர் சங்கம் கோரியுள்ளது. 


English Summary
BASL questions Gotabaya on presidentialship 09-07-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...