அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பகாசூரன்: திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   17 , 2023  12:14:13 IST


Andhimazhai Image

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ‘நவீன பகாசூரன்கள்’ யார் என்பதற்கான விடை சொல்லும் திரைப்படமே பகாசூரன்.

 

கடலூர் அருகே உள்ள கிராமத்திலிருந்து சேலத்திற்கு வந்து பரதேசியாக சுற்றித் திரியும் செல்வராகவன் தீவிரமான சிவபக்தர். அவர் மிக கொடூரமான முறையில் மூன்று பேரை அடுத்தடுத்து கொலை செய்கிறார். அதேபோல், மற்றொரு பக்கம் தன்னுடைய அண்ணன் மகளின் தற்கொலைக்கான காரணத்தை தேடிச் செல்கிறார் முன்னாள் ராணுவ மேஜரான நடராஜ். இறுதியில் இவர்கள் இருவரும் சந்திக்கும் புள்ளியே படத்தின் மீதிக் கதை.

 

கிரைம் த்ரில்லருக்கான பின்னணி இசையுடன் தொடங்கும் பகாசூரன், செல்வராகவனின் மிரட்டலான நடிப்பால் படம் சூடு பிடிக்கிறது. அந்த சூடு நடராஜ் வந்ததும் குறைந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இடைவேளைக்குப் பிறகு சொல்லப்படும் செல்வராகவனின் குடும்பப் பின்னணி மனதைப் பிசைகிறது.

 

தெருக்கூத்து கலைஞராக வரும் பீமாராசு (செல்வராகவன்) அப்பாவி கிராமத்து அப்பாவாக வாழ்ந்துள்ளார். சாணி காகிதம் படத்தில் பார்த்த அதே செல்வராகவனை இந்தப்படத்திலும் பார்க்கலாம். க்ரைம் வீடியோக்களைப் பதிவிடும்  யுடியூபராக வரும் நடராஜ் வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். செல்வராகவனின் தந்தையாக தயாரிப்பாளர் ராஜன், கல்வி தந்தையாக ராதாரவி, நாயகி ரிச்சா, கூல் ஜெயந்த், லயா என ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றனர்.


 

அப்பாவி பெண்கள் எப்படி பாலியல் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள்? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஏன் கண்காணிக்க வேண்டும்? என்பது பற்றி படம் பேசியிருந்தாலும், அதில் போதிய அழுத்தமும், விவரணையும் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். செல்வராகவன் செய்யும் கொலைகளை காவல் துறை கண்டுபிடிக்காமல் இருப்பது லாஜிக் மிஸ்ஸிங். படத்தில் பாதி இடங்களில் சாம் சி.எஸ் பின்னணி இசையே தாங்கி பிடிக்கிறது.

 

‘சென்னை பாண்டிச்சேரிலா வேண்டாமா. அங்கலாம் வெள்ளைக்காரங்க மாதிரி ஆகிட்டாங்க. பெரம்பலூர்லன படி மா…’, “ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே” போன்ற வசனங்கள் படம் முழுவதும் இடம்பெறுவதைப் பார்க்க முடிகிறது.  அயலி போன்ற திரைப்படங்கள் பெண் கல்வி குறித்த நல்லெண்ணத்தை விதைக்கும் சமயத்தில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பகாசூரன் வெளியாகியிருப்பது பெரும் குறையே!


 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...