அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   08 , 2021  15:11:44 IST

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடரால் இரண்டு ஆண்டுகளாக பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ப விபூஷண் விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது குடும்பத்தினர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸ் ஆகியோர் பத்மபூஷண் விருது பெற்றுக்கொண்டனர்.

இதேபோன்று தமிழகம் சார்பில் திரைப்பட பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, சமூக சேவகி கிருஷ்ணம்மாள், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தொழில் முனைவோரான ஸ்ரீதர் வேம்பு, மருத்துவத் துறையில் திருவேங்கடம் வீரராகவன், கார்ட்டூன் ஓவியர் கே.சி.சிவசங்கர், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், கூடைப்பந்தாட்ட வீராங்கனை பி.அனிதா உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும், டெரகோட்டா சிலை வடிக்கும் கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தர், சமூக சேவகர் சுப்புரமணியன், 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள், கியர் மேன் ஆஃப் கோயம்புத்தூர் பி.சுப்பிரமணியன் ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுக்கொண்டனர்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...