![]() |
புது நாவல் வரிசை: 3 - பாகன்Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 17 , 2021 18:41:09 IST
![]()
எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். அவரின் அடுத்த நாவலான பாகனை யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நாவலின் கதைக்களம் என்பது பற்றி கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தந்தையை மையப்படுத்திய சிறுகதை ஒன்றிரண்டு எழுதினேன். தந்தை என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் என்னென்ன? இன்னும் என்னென்ன அர்த்தங்களை அந்த சொற்களுக்கு நம்மால் தர முடியும் என்ற தேடலில் இருந்தபோது, நான் தந்தையானதும், என் தந்தையையும் இழந்ததும் நடந்தது. தனிப்பட்ட அனுபவமும் தேடலும் என்னுள் மெருகேறி ‘பாகன்’ என்ற நாவல் உருவானது,” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
நூல்: பாகன் ஆசிரியர்:கிருஷ்ணமூர்த்தி பதிப்பகம்: யாவரும்
விலை: 155 தா.பிரகாஷ்
|
|