அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னை உயர்நீதிமன்றம்: 5 நீதிபதிகள் பதவி ஏற்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   07 , 2023  11:16:59 IST

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், 18 பேரை நீதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், 6 வழக்கறிஞர்கள், 3 மாவட்ட நீதிபதிகள் என 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

 
இந்த 9 பேரில் தற்போது முதல்கட்டமாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.

 
இதனையடுத்து இன்று காலை 10,35 மணிக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 5 பேருக்கும் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். விக்டோரியா கவுரி. பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...