![]() |
ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை தரவில்லை - எழுத்தாளர் சுகிர்தராணிPosted : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26 , 2021 12:00:32 IST
![]()
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், “டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.
|
|