அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகை கங்கனா ரணாவத்தின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   12 , 2021  14:25:28 IST

‘நடிகை கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் கங்கனா தன்னுடைய அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இதற்கடுத்து, தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் ‘இந்தியா 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது. 1947-ல்  கிடைத்தது பிச்சை’ எனத் தெரிவித்தார். இக்கருத்து வேகமாக இணையத்தில் வைரலாகத் தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கங்கனாவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா, ‘கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும். உண்மையாக சுதந்திரத்திற்குப் போராடியவர்களைத் தன் அரசியல் லாபத்திற்காக சிறுமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய ‘பத்ம ஸ்ரீ’ விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் கங்கனாவின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...